600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
அரவிந்த்சாமி என்றாலே 90களின் இளம் பெண்களுக்குப் பிடித்த நடிகராக கண்டிப்பாக இருப்பார். ஆனால், இந்தக் கால இளம் பெண்களுக்கும் பிடித்த நடிகராக இருப்பது ஆச்சரியமானது தான். 'ரோஜா' படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி என்றாலே அழகான ஆண்மகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு பேச்சு வழக்கே ஆரம்பமானது. 'அவருக்குப் பெரிய அரவிந்த்சாமின்னு நினைப்பு' என்பது அப்போதெல்லாம் அடிக்கடி பேசப்பட்ட விஷயமாக இருந்தது.
இடையில் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அரவிந்த்சாமிக்கு மீண்டும் ஒரு ரவுண்ட் வரும் வாய்ப்பு 'தனி ஒருவன்' படம் மூலம் கிடைத்தது. அரவிந்த்சாமி நாயகனாக நடித்துள்ள 'நரகாசூரன்' படம் இந்த மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற போது படத்தின் மற்றொரு நாயகனான சந்தீப் கிஷன் சொன்ன விஷயம் தான் தலைப்பிற்குக் காரணம்.
“இந்தப் படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆன பின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே, எனது அம்மா, இந்தப் படத்தை எனக்கு முதல் காட்சியே காட்ட வேண்டும் என்றார்கள். எனது தங்கையும், 'அரவிந்த்சாமி அழகான நடிகர்' என அவரைப் பற்றியே பேச ஆரம்பித்தார்கள். படத்தில் நானும் நடிக்கப் போகிறேன் என்பதைப் பற்றி அவர்கள் பேசவேயில்லை,” என்று கொஞ்சம் பொறாமை கலந்த பேச்சுடன் தெரிவித்தார்.
சந்தீப் கிஷன் மட்டுமல்ல விழாவில் பேசிய பலரும் அரவிந்த்சாமியின் அழகை வழக்கம் போல புகழ்ந்து பேச, கொஞ்சம் வெட்கத்துடனேயே அந்தப் புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டார் அரவிந்த்சாமி.