ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.எல்.விஜய்யின் தியா படத்தில் நடித்தபோது, சாய்பல்லவி நட்பாக பழகவில்லை. ஸ்பாட்டில் ரொம்ப அலட்சியமாக நடந்து கொண்டார் என்று அந்த படத்தின் நாயகன் நாக செளரியா, சாய்பல்லவி மீது புகார் சொல்லி வந்தார். அதனால் சாய்பல்லவியின் பெயர் சினிமா வட்டாரங்களில் டேமேஜ் ஆனது.
அதையடுத்து, நான் யாரையும் அலட்சியப்படுத்தவில்லை என்று சாய்பல்லவி பேட்டிகளில் தெரிவித்து வந்தார். அதையடுத்து தற்போது எந்த ஸ்பாட்டிற்கு சென்றாலும் படக்குழுவுடன் ஒரு விசிட் அடித்துவிட்டு தான், அடுத்தகட்ட வேலைகளில் இறங்குகிறாராம் சாய்பல்லவி.
அதோடு,சமீபத்தில் பாடி பாடி லேசி மனசு என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றபோது, தனது காலில் அடிபட்டபோதும், ஸ்பாட்டை விட்டு வெளியேறாமல் படப்பிடிப்பு முடியும் வரை வலியை பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் சாய்பல்லவி. சாய் பல்லவியின் அந்த அர்ப்பணிப்பை அந்த ஸ்பாட்டில் இருந்த அனைவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.