இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நீண்ட இடைவேளைக்கு பின், த்ரிஷா நடித்த மோகினி, சதுரங்கவேட்டை - 2 மற்றும் 96 என, ஆறு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மோகினி படம் குறித்தும், அவரது திரையுலக அனுபவம் குறித்தும் த்ரிஷாவிடம் பேசியதிலிருந்து:
முதல் முறையாக திகில் மற்றும் இரட்டை வேடத்தில் நடிப்பது குறித்து?
முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. இப்படம் ரசிகர்களுக்கு 'விஷூவல் ட்ரீட்'டாக அமையும். காதல், இசை, ஆக் ஷன் என கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்தும், மோகினி படத்தில் உள்ளன. குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.
இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?
வரலாற்று படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. சொந்த படம் எடுத்து கையை சுட்டுக் கொள்ள தயாராக இல்லை. மோகினி - 2 படத்தில், வேறு நடிகை நடித்தால், எனக்கு கோபம் வரும். கொடி படம் மாதிரி, 'நெகடிவ் கேரக்டரில்' நடிக்கவும் ஆசையாக உள்ளது.
சாமி - 2 படத்தில் நடிக்காதது ஏன்?
சாமி - 2 படத்தின் கதை, எனக்கு ஏற்ற மாதிரி இல்லை. அதனால், துவக்கத்திலேயே, அந்த படத்திலிருந்து விலகி விட்டேன். படப்பிடிப்பில் பங்கேற்கவே இல்லை.
திருமணம் எப்போது?
இன்னுமா இந்த கேள்வியை கேட்கிறீர்கள்? எனக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி பரவலாக இருந்தது; தற்போது அது காணாமல் போய்விட்டது. எனக்கு திருமணம் எப்போது என்ற கேள்வியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக யாருமே கேட்கவில்லை. திருமணம் என்பது இரண்டாம் பட்சம் தான்.
உங்களை அதிர்ச்சியாக்கிய விஷயம்?
'யுனிசெப்'பில் எடுத்த ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளதை அறிந்து அதிர்ச்சியானேன். இதற்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த, 20 ஆண்டுகளில் இந்தியா மாறிவிட்டது. கல்வித் தரம் உயரும்போது, எல்லாம் சரியாகி விடும் என நினைக்கிறேன்.
ஏஞ்சலினா ஜோலி என, உங்களை புகழ்கின்றனரே...
மோகினி படத்தை பார்த்து விட்டு, நான், ஏஞ்சலினா ஜோலி போல் நடித்துள்ளேனா, இல்லையா என கூறட்டும். மோகினி படத்தில் நிறைய காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தது சவாலாக இருந்தது. ஆக் ஷன் காட்சிகளில், 'டூப்' போடவில்லை.
15 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது எப்படி உள்ளது?
இதற்கு ரசிகர்களுக்கு தான், நன்றி சொல்லணும். இயக்குனர்களால் தான், இவ்வளவு வித்தியாசமான படங்களில் நடிக்க முடிந்தது.
சினிமாவுக்கு வந்தபோது எப்படி இருந்தீர்களோ, இன்னும் அப்படியே தோற்றமளிப்பது எப்படி?
அதற்கு, என் தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தான், நான் நன்றி கூற வேண்டும். நல்லா சாப்பிடுவேன்; உடற்பயிற்சி செய்வேன். ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் தோற்றமளிக்க விரும்புகிறேன்.