அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
பின்னணி பாடகியாக சினிமாவில் அறிமுகமாகி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கினார் ஸ்ருதிஹாசன். அதன்பிறகு நடிகையாக வலம் வந்தவர், இசைக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்தார்.
தற்போது சபாஷ் நாயுடு படத்தில் நடிப்பவர், மகேஷ் மஞ்ரேக்கரின் ஹிந்தி படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர், மீண்டும் தான் இசையில் கவனம் செலுத்தப்போவதாக சொன்னார்.
நிறைய பாடல்கள், பாடுவதோடு, எழுத்திலும் ஆர்வம் காட்டப்போவதாக கூறிய ஸ்ருதிஹாசன், தான் எழுதி வைத்திருந்த கவிதைகளையும் படித்து காண்பித்தார். நான் எழுதி வைத்துள்ள கவிதைகளை இதுவரை வெளியிடவில்லை என்றபோதும், பல வருடங்களாக நிறைய எழுதி வைத்திருக்கிறேன் என்றார் ஸ்ருதிஹாசன்.