தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சகாப்தம், மதுரைவீரன் படங்களில் நடித்தவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன். மதுரைவீரன் படத்திற்கு பிறகு நெதர்லாந்து சென்று நடிப்பு பயிற்சி எடுத்து விட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்தபடியாக தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தநேரத்தில், ஒரு பெண்ணுடன் தான் இணைந்திருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் சண்முகப்பாண்டியன். அந்த பெண் அவருடன் நெதர்லாந்தில் படித்தவராம்.
சமீபகாலமாகவே நெதர்லாந்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சண்முக பாண்டியன், அந்தத் தருணங்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார்.
இணையதளங்களில் இவர் தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா? என்று கமெண்ட் கொடுத்து அந்த போட்டோவை வைரலாக்கி வருகிறார்கள். இந்த கமெண்டுகளுக்கு சண்முகப்பாண்டியன்தான் பதில் கொடுக்க வேண்டும்.