'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாண்டிராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்தி நாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சத்யராஜ், சாய்ஷா, பிரியா பவானி சங்கர், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றபோது இயக்குனர் பாண்டிராஜ் பீட்டா அமைப்பை விமர்சித்து பேசினார். அவர் பேசும்போது, இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ரேக்ளா ரேசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அந்த காட்சியில் ஒரு நிமிடத்தை பீட்டாவைச் சேர்ந்தவர்கள் நீக்கி விட்டனர்.
நான் கிராமத்தில் ஆடு மேய்த்தவன் தான். எங்களைப் போன்று எங்களது ஆடு மாடுகளை யாராலும் கவனித்துக் கொள்ள முடியாது. அவற்றை நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் பார்க்கிறோம்.
ஆனால், ஆடு - மாடுகளின் மீது அதை வளர்ப்பவர்களுக்கு இல்லாத அக்கறை பீட்டா அமைப்புக்கு இருப்பது போன்று காட்டிக்கொள்கிறார்கள். கிராமத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டின் திருமணத்திற்கு சென்றால் கூட, ஆடு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வேண்டுமே என்று நாங்கள் ஓடி வருவோம். அந்த அளவுக்கு எங்களது பிள்ளைகளை போன்று அவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம்.
அதனால் எங்களது ஆடு மாடுகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். அதற்காக பீட்டா கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, சிக்கன், மட்டன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியப் போகிறது என்று பீட்டாவை கடுமையாக தாக்கிப் பேசினார் பாண்டிராஜ்.