'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆண்பாவம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சீதா. அதன்பிறகு பல படங்களில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்தார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர்குரு, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி ஒரு கண்மணி உள்பட 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். இப்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழில் எப்போதாவாது ஓரிரு படத்தில் நடிக்கிறார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் கொலைகாரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் அர்ஜூன், ஆஷிமா அகர்வால், நாசர், விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆண்ட்ரீவ் லூயிஸ் இயக்குகிறார்.
"தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று எந்த வைராக்கியமும் இல்லை. நல்ல வாய்ப்புகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வருகிறது அதனால் அங்கு நடிக்கிறேன். கொலைகாரன் படத்திற்கு பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்" என்கிறார் சீதா.