இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'பிரேமம்' மலையாளப் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு நடிகையாக மாறினார் சாய் பல்லவி. அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த “பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தெலுங்கில் சாய் பல்லவிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. இருப்பினும் சாய் பல்லவிக்குக் கிடைத்த புகழைத் தாங்கிக் கொள்ள முடியாத யாரோ ஒருவர் தொடர்ந்து அவருக்கு எதிராக சில சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவி தற்போது நடித்து வரும் தெலுங்குப் படமான 'படி படி லேச்சி மனசு' படத்தின் நாயகனான சர்வானந்த்துக்கும் அவருக்கும் இடையே படப்பிடிப்பில் பிரச்சினை என சர்ச்சையைப் பரப்பியுள்ளார்கள். ஆனால், படக்குழுவினர் இதை அடியோடு மறுக்கிறார்கள். யாரோ வேண்டுமென்றே சாய் பல்லவிக்கு எதிராக இப்படி ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே பரவ விடுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏற்கெனவே, சாய் பல்லவிக்கும் அவருடன் நடித்த தெலுங்கு ஹீரோக்களான நானி, நாக சௌரியா ஆகியோருடன் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி தற்போது தமிழில் 'மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.