தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் விதவிதமான கதைக்களத்தில் படங்களை இயக்கி வருபவர் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். உதயநானுதாரம் படம் சினிமா பின்னணியை கொண்டது என்றால், ஹவ் ஓல்டு ஆர் யூ படம் மத்திம வயது பெண்களின் வாழ்க்கையை பேசியது. அவர் தற்போது இயக்கிவரும் காயம்குளம் கொச்சுன்னி என்கிற படம் பல வருடங்களுக்கு முன் உண்மையாகவே வாழ்ந்து மறைந்த மிக பயங்கரமான கொள்ளையன் ஒருவனின் வாழ்க்கை வரலாற்றை பேச வருகிறது..
இதில் நிவின்பாலி, மோகன்லால் இருவரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக போலீஸ் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.. போலீஸ் கதை ஒன்றும் அவருக்கு புதிதல்ல.. சில வருடங்களுக்கு முன் பிருத்விராஜை வைத்து மும்பை போலீஸ் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கி அதிரவைத்தவர் தான் ரோஷன் ஆண்ட்ரூஸ்.