'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னையில் உலக குறும்பட விழா அக்டோபர் மாதம் 13 மற்றும் 14ந் தேதிகளில் பிரமாண்டமாக நடக்கிறது. இதுபற்றிய விபரம் வருமாறு:
இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன.
திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்ளும் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட உள்ளன. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் குறும்படங்களின் திரையிடலும், விருது வழங்கும் விழாவும் வரும் அக்-14ம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அக்டோபர் 5ந் தேதிக்குள் தங்கள் குறும்படத்தை விழாக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்
இத்துடன் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பயிற்சி அமர்வுகள் நடத்தப்படவுள்ளன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டியிடும் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான குறும்படங்கள் இதில் கலந்து கொள்கின்றன.