பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
என்.ஜி.கே. படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை லண்டனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
சூர்யா உடன் மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தை தெலுங்கில் பிசினஸ் செய்வதற்காக தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இப்படத்திலிருந்து அவர் தற்போது விலகியிருக்கிறார்.
“இப்படத்திற்கான தேதிகள் நான் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள 'ஏபிசிடி' படத்துக்கு கொடுத்த தேதிகளும் க்ளாஷ் ஆகின்றன. ஏபிசிடி படப்பிடிப்பை கேன்சல் பண்ணினால் மீண்டும் நடத்துவது கஷ்டம். அதனால்தான் சூர்யா படத்திலிருந்து விலகினேன்.” என்று அல்லு சிரிஷ் சொன்னாலும், படத்துறையில் யாரும் அதை நம்பத்தயாராக இல்லை.
இயக்குநர் கே.வி. ஆனந்த் சொன்ன கதையில் தனக்கு அதிக வேலை இல்லை என்பதாலேயே இந்த முடிவை அவர் எடுத்ததாகவும், இயக்குநர் கே.வி. ஆனந்த் அவரை கன்வின்ஸ் செய்ய எந்த முயற்சியும் எடுக்காததினால்தான் விலக வேண்டியதாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.