தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் பட இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டு விட்டு, பின், ஏமாற்றி விட்டதாக, பரபரப்பாக பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
தெலுங்குப் பட உலகைச் சேர்ந்தவர்களைப் பற்றி தாறுமாறாகப் பேட்டிக் கொடுத்து, பட உலகினரை கிடுகிடுக்க வைத்தவர், தற்போது, தமிழ் பட உலகினர் மீது கவனம் செலுத்தத் துவங்கி இருப்பது, கோலிவுட் வட்டாரத்தையும் கிடுகிடுக்க வைத்தது. முருகதாஸ், ராகவா லாரன்ஸ் என பலரும் தன்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றியவர்கள் என பட்டியலிட்டவர், அடுத்தடுத்தும் லிஸ்ட்களை வெளியிடுவேன் என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
இது மட்டுமல்ல; படுக்கையை பகிர்ந்து கொண்டபோது, நடிகர்களும், இயக்குநர்களும் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் என்று, படு ஆபாசமாகவும் பேட்டிக் கொடுத்து வருகிறார். யூடியூப் சேனல்களில் அவரது பேட்டி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
இதனால், கோபமடைந்திருக்கும் தமிழ் பட உலகினர், ஸ்ரீரெட்டியை அடக்குவது எப்படி என புரியாமல் அமைதியாக உள்ளனர். இருந்தாலும், ஸ்ரீரெட்டியை எப்படியாவது கட்டுப்படுத்தியாக வேண்டும் என்றும் நினைக்கின்றனர். போலீசில் புகார் என்று போனால், தன்னைப் பற்றிய ரகசியங்களையும் ஸ்ரீரெட்டி வெளியிட்டு விடுவாரோ என்றும் பலரும் அஞ்சி அமைதியாகி விட்டனர்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி மீது புகார் கொடுக்கத் தயார் என, சினிமா தயாரிப்பாளர் ஏ.ஆர்.பிரபு முன்வர, அவரை வைத்து, ஸ்ரீரெட்டி மீது, போலீசில் புகார் கொடுக்க ஏற்பாடாகி உள்ளது. விரைவில், பிரபு, நடிகை ஸ்ரீரெட்டி மீது ஆபாசத்தை பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு, போலீசில் புகார் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.