ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பபட்டிருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் டார்ஜிலிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் 2019 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகினது.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதால் சட்டசபை தேர்தலுக்கு முன் 3 படங்களில் நடிக்க இருக்கிறார், அவற்றில் ஒன்று கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படம் என்றும், சமீபத்தில் கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை சந்தித்து பேசினார் என்றும், இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண முடிவெடுத்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியானது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 'முத்து', 'படையப்பா', 'லிங்கா' ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார் ரஜினி. 'முத்து', 'படையப்பா' மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் லிங்கா படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டால், அப்படியொரு திட்டமே இல்லை... யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்கிறார்.