ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை நமீதா புரமோத். இயக்குனர் பிரியதர்ஷனின் நிமிர் படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார். நிமிர் சரியான வரவேற்பை பெறாததால் நமீதாவுக்கும் அடுத்து சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் மீண்டும் மலையாள சினிமாவுக்கே திரும்பி விட்டார். ஆனாலும் தமிழுக்கு வரும் ஆர்வத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எல்லா மலையாள நடிகைக்குமே தமிழ் சினிமா கனவு இருக்கும், எனக்கும் இருக்கிறது. நிமிர் படத்திற்கு பிறகு சில வாய்ப்புகள் வந்தது. அவர்கள் கேட்ட தேதியில் மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. கதை, தொழில்நுட்பம் இரண்டிலுமே தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. தமிழ் சினிமாவின் கிரியேட்டிவிட்டி கண்டு வியந்து போயிருக்கிறேன்.
நான் நடித்து சமீபத்தில் வெளிவந்த கம்மர சம்பவம் எனக்கு மலையாளத்தில் இன்னும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. எனது பானுமதி கேரக்டர் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். தற்போது திலீப்புடன் இணைந்து 3டி படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இது பெரிய பட்ஜெட்டில் உருவாகிற படம். முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நடந்துள்ளது. அடுத்து துபாயில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. தமிழ் படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும். என்கிறார் நமீதா புரமோத்.