இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வருடம் கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானதை தொடர்ந்து, திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து சினிமா பெண்கள் நல அமைப்பை (WCC) துவங்கினார்கள் சில நடிகைகள்.. இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்தனர்.
அந்த நடிகை பிரச்சனையில் சிக்கி சிறை சென்றுவந்த நடிகர் திலீப்பை தற்போது நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் குழப்பம் விளைவித்து வரும் வேலையையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.
ஆனால் நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த பெண்கள் நல அமைப்பில் சேரவில்லை.. இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள மம்தா, "பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்று தேவை என நான் நினைக்கவில்லை. அதனால் நான் சேரவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை கடத்தல் விவகாரத்தை பற்றி கேட்டபோது, "எந்த ஒரு பிரச்சனையும் சிலரை பொறுத்தவரை அவர்களாகவே உருவாக்கி கொள்வது தான்" என எந்த தயக்கமும் இன்றி பதில் கூறியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.