Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு

20 ஜூலை, 2018 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Tamilans-will-suffer-due-to-north-indians-says-Director-Yureka

மதுரை சம்பவம், தொப்பி, சிகப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கியவர் யுரேகா. தற்போது காட்டுப்பய சார் இந்த காளி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 3-ந்தேதி திரைக்கு வருகிறது.

ஜெய்வந்த் நாயகனாக நடித்து, தயாரித்துள்ளார். அவருடன் ஐரா, ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.


அப்போது இயக்குனர் யுரேகா பேசுகையில், எனது எல்லா படங்களிலுமே சமூகம் சார்ந்த விசயங்களைத்தான் படமாக்கி வருகிறேன். அந்த வகையில், சிகப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் சென்னைக்கு ஒரு சிகப்பு விளக்கு பகுதி வேண்டும் என்று சொன்னேன். அதை பலரும் கிண்டல் செய்தார்கள்.


நான் எதற்காக அப்படி சென்னேன் என்றால், இன்றைக்கு வட இந்தியாவில் இருந்து வேலை தேடி கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். அதுபோன்ற நபர்களால் பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் மும்பை, கோல்கட்டாவில் இருப்பது போன்று சென்னையிலும் சிகப்பு விளக்கு ஏரியா வேண்டும் என்று சொன்னேன்.


அதேபோல் தான் இப்போது இயக்கியுள்ள காட்டுப்பய சார் இந்த காளி படத்திலும் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருபவர்களால் ஏற்படும் ஒரு பிரச்சினையைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.


இந்த படத்தில் ஜெய்வந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்பட நாயகி ஐரா நடித்துள்ள வேடத்தில் நடிக்க எந்த நடிகையும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஐரா தைரியமாக நடித்துள்ளார்.


அதேபோல் கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசனும் இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 3-ந்தேதி திரைக்கு வரும் இந்த படம் தமிழர்களுக்கான ஒரு படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் யுரேகா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in