ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அமலாபாலை பொறுத்தவரை சினிமாவில் தனது கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதாகட்டும், நிஜவாழ்வில் தன்னுடைய கேரக்டர் இதுதான் என வெளிப்படுத்துவதாகட்டும், தில்லாக தனது கருத்துக்களை சொல்ல தயங்கமாட்டார். அந்தவகையில் மலையாள திரையுலகை சுழன்றடிக்கும் நடிகை கடத்தல் பிரச்சனை, தெலுங்கு, தமிழை சுழன்றடிக்கும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பிரச்னை இவை எல்லாவற்றிலும் தனது பதிலை முன் வைக்கிறார் அமலாபால்.
சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பெண்கள் பலமான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.. பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு சினிமா துறை செட்டாகாது. மற்ற துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சினிமாவில் இருக்கும் பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார் அமலாபால்.