'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெர்க்குரி படத்தை தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இவற்றில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கும் படத்தில் போலீஸாக நடிக்கிறார். பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார், இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பொன் மாணிக்கவேல் என பெயரிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான குற்றவாளிகள் தொடர்ந்து பிடிபட்டும், ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டும் வருகின்றன. இதை சிறப்பாக செய்து வருகிறார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல்.
இவரின் பெயர் படத்தின் தலைப்பாக இருப்பதாலும், படத்தில் பிரபுதேவா போலீஸாக நடிப்பதாலும், இது சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட கதையாகவும், பிரபு தேவா பொன் மாணிக்கவேல் ரோலில் நடிக்கலாம் என தெரிகிறது.