மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
மலையாள நடிகர்களில் தங்களது படத்தின் 2-ஆம் பாகங்களில் அதிகம் நடிப்பவர் யாரென்றால் அது நடிகர் ஜெயசூர்யா தான். அந்த வகையில் கடந்த 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வருடம் 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது,
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'ஆடு; ஒரு பீகர ஜீவியானு படம் சுமாரான வெற்றி பெற்றாலும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் செய்தனர். இந்தப்படமும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் 2016ல் ஜெயசூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பிரேதம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரேதம்-2 என்கிற பெயரில் எடுக்கவுள்ளார்கள்.
முதல் பாகத்தில் டான் பாஸ்கோ என்கிற மனநல மருத்துவராக நடித்திருந்த ஜெயசூர்யா, ஆவியாக அலையும் கல்லூரி மாணவிக்கு தனது விசாரணை மூலம் ஜெயசூர்யா நீதி வாங்கித்தரும் விதமாக கதை அமைந்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் ஜெயசூர்யாவின் கேரக்டரை இன்னும் டெவலப் செய்துள்ளாராம் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர்.. ஆம்.. ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான அதே ரஞ்சித் ஷங்கர் தான்...