தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி பாலியல் ரீதியான உறவு கொண்டவர்கள் பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக டோலிவுட்டில் உள்ள பல சினிமா பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில், தற்போது அவரது பார்வை கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி என பலரது பெயர்களை வெளியிட்டு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
ஆனால் தெலுங்கு சினிமா உலகில் ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில், எதிர்ப்பு வலுக்கிறது. ஏற்கனவே ஸ்ரீரெட்டி சினிமாத்துறையினர் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லி வருவதாக நடிகர் விஷால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் மீது ஸ்ரீரெட்டி அபாண்டமாக பழி சொல்வதாக இயக்குனர் சுந்தர்.சியும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பெப்சி தலைவரான டைரக்டர் ஆர்.கே.செல்வமணியும் ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், யாரோ ஒருத்தர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சினிமாத்துறையினரையும் களங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விசயம் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இந்த தொடர் குற்றச்சாட்டுக்கு, விரைவில் சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.