ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
நடிகை மற்றும் சின்னத்திரை தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி படங்களை இயக்கினார். தற்போது, அவர் ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பசங்க படத்தில் நடித்த கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் முதலில் அசோக் செல்வனும், ஐஸ்வர்யா ராஜேசும் தான் நடிப்பதாக இருந்தது. மாற்றம் நடந்தது எப்படி என்பது குறித்து இப்படி விளக்கம் அளிக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்:
ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து ஹவுஸ் ஓனர் படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் முதல் டிராப்ட் மட்டுமே தயாராக இருந்ததால் அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் அவர்கள் இருவரும் பிஸியாகி விட்டனர். அவர்கள் தற்போதைய படங்களை முடித்து விட்டு தான் திரும்ப வருவார்கள். அதனால் கிஷோர், லவ்லினை வைத்து படத்தை தொடங்கி விட்டேன்.
முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.