‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வளர்ந்து வரும் இளம் நடிகர் பாபிசிம்ஹா. நேரம், பீட்சா, சூதுகவ்வும், ஜிகிர்தண்டா, பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார். பாபி சிம்ஹா நேற்று முன்தினம் இரவு சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர ஓட்டல் பாரில் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் நண்பருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாபிசிம்ஹா தனது நண்பர் உடன் அதே ஓட்டலில் உள்ள பாரில் மது அருந்தியிருக்கிறார். போதை அதிகமானதும் அவரது நண்பர்களில் ஒருவரான கருணா என்பவருடன் படம் சம்பந்தமாக பேசியிருக்கிறார். இதில் வாக்குவாதம் முற்றி திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கி, கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
பாரில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். பார் ஊழியர்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களையும் தாக்கி உள்ளார். இதனால் ஓட்டல் நிர்வாகி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று அமைதியாக கலைந்து செல்லாவிட்டால் கைது செய்ய வேண்டியது வரும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.