ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளத்தை சேர்ந்த 2 ம் வகுப்பு படிக்கும் மாணவனான யாசின் கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளிக்கு செல்லும் போது கீழே கிடந்த பையில் ரூ.50,000 பணம் இருப்பதை கண்டான். அதனை தனது ஆசிரியர் மூலம் போலீசில் ஒப்படைத்தான்.
அந்த சிறுவனை நேரில் அழைத்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிறுவன் யாசினை பாராட்டினார். பிரபலங்கள் பலரும் சிறுவனின் நேர்மையை பாராட்டினர். வறுமையில் வாடும் அவனுக்கு உதவ ரஜினி மன்ற நிர்வாகிகள் யாசினை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம் எனவும், தனக்கு ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினி, சிறுவன் யாசினை சந்தித்தார். அப்போது யாசினை பாராட்டிய ரஜினி அவனுக்கு தங்க செயினை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சிறுவன் யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன். அவனது படிப்பு செலவை ஏற்கிறேன். அவன் என்ன படிக்க நினைத்தாலும் படிக்க வைப்பேன் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் லோக்ஆயுக்தா கொண்டு வந்துள்ள வரவேற்கதக்கது. அதிகாரம் உள்ள அமைப்பாக அது செயல்பட வேண்டும்.
லோக்சபா, சட்டசபை தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவது நல்ல விஷயம். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை. இது போன்ற பசுமை வழிச்சாலை திட்டங்களால் தான் நாடு வளம் பெறும் என்றார்.
ரஜினியை சந்தித்ததன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும், தான் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் சிறுவன் யாசின் தெரிவித்துள்ளான்.