விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
கன்னடத்தில் வெளியான யு-டர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர், அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை எஸ்.பி.சினிமா சார்பில் சங்கர் தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார். பரத் நீலகண்டன் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடந்தது. படத்தில் நடிப்பது பற்றி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:
கதையை விவரிப்பதற்காக இயக்குனர் பரத் பெங்களூருவுக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். நான் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பிளாக்குகளாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.
இந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் என்று கூறமாட்டேன், ஆனால் ஒரு உளவியல் வகையை சார்ந்தது. இதில் என் நடிப்பு திறமையை காட்ட நல்ல வாய்ப்பு இருக்கிறது. வருகிற படங்களையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை. தேர்ந்தெடுத்த படங்களிலேயே நடிக்கிறேன். அதில் இதுவும் ஒன்று. என்றார் ஸ்ரீரத்தா.