ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள சின்னத்திரை சீரியல் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவரது தொடரில் நடித்து வரும் நிஷா சாரங் பாலியல் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கேரள மகளிர் ஆணையம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் மீது மற்றொரு நடிகையும் புகார் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிதது வருகிறவர் ரச்சனா. அவர் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு உன்னி கிருஷ்ணன் இயக்கிய தொடரில் நடித்தேன். அவர் என்னை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் என்னை துன்புறுத்தினார். அவமானப்படுத்தினார், தகாத வார்த்தைகளால் பேசினார். அவர் மிகவும் திமிர்பிடித்தவர். சீரியலில் நடிக்கும் பெண்களை அடிமையாக நினைக்கிறவர். சினிமா வாய்ப்பு கிடைத்ததும் சீரியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் சினிமா நடிகை ஆனதுகூட அவருக்கு பிடிக்கவில்லை, சினிமா வாய்ப்பு கிடைத்த மறுநாளே என்னை சீரியலில் இருந்து விலக்கி விட்டார்.
இப்போது அவர் நிஷாவுக்கும் தொல்லை கொடுத்திருப்பதை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். நிஷாவுக்கு நீதி கிடைக்க அவருக்கு துணையாக இருப்பேன். மலையாள திரையுலகமும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ரச்சனா கூறியுள்ளார்.