மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 120 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லனின் நண்பனாக கலையரசன் நடிக்கிறார். இப்போது ரஜினியின் நண்பனாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறார் ரஜினி. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் வருகிற 20ந் தேதி முதல் நடக்கிறது. என்றாலும் படக்குழுவினர் அங்கேயே தங்கி உள்ளனர். ரஜினி 19ந் தேதி டார்ஜிலிங் கிளம்பி போகிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பஹத் பாசிலும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. படத்தில் பகத் பாசில் நடிப்பது பற்றி இன்னும் சில தினங்களில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. பஹத் பாசில், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.