டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படம் விவசாயம், மீனவர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி உருவாகிறது. இந்த படத்தின் போஸ்டரில் விஜய் புகைப்பிடித்தபடி காட்சி கொடுத்ததற்கு அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து சட்டரீதியாகவும் எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், இந்த சர்கார் படத்தில், கதைப்படி ஐடி பீல்டில் இருந்து வரும் விஜய், மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்பவர். அவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளுடன் மோதுகிறாராம்.
அதையடுத்து ஒரு கட்டத்தில் தனது கையில் அதிகாரம் இருந்தால்தான், தான் நினைத்தபடி மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நினைக்கும் விஜய், தானே அரசியல்வாதியாகி விடுவாராம். அதன்பிறகு தேர்தலை சந்தித்து மக்களின் ஆதரவோடு அவர் முதலமைச்சராகி சர்காரையே கைப்பற்றி விடுவது போன்று இந்த படத்தின் கதை உருவாகியிருப்பதாக தற்போது பரபரப்பு செய்திகள் கசிந்துள்ளன.
ஏற்கனவே தமிழில் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக அர்ஜூன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.