‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு தெலுங்கு சினிமாவில் காட்டு தீயாய் பரவி, பலரை சுட்டரிக்க வைத்தது.
சமீபத்தில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு. மிகப்பெரிய இயக்குநர் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்தி கொண்டார், நேரம் வரும்போது கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில், "தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கீங்க, கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா.? வெள்ளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள், ஆனால் நிறைவேற்றவில்லை. அங்கு நாம் நிறைய....? நீங்கள் நல்ல மனிதர் என பதிவிட்டிருக்கிறார்.
ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முருகதாஸ், தற்போது விஜய்யின் சர்கார் படத்தை இயக்கி வருகிறார்.