இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் வெளியான பிறகுதான் அந்த படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக சொல்லி படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்திற்கு பர்ஸ்ட் லுக்கிலேயே புகையால் புகைச்சல் உருவாகி உள்ளது.
தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரயிருப்பதால் சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல் படப்பிடிப்பில் விஜய்யும், முருகதாசும் மும்முரமாக இருக்கிறார்கள். தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் சர்கார் படப்பிடிப்பு துரிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வரலட்சுமி, விஜய் காதில் கடுக்கன் அணிந்தபடி ஒரு குடையை பிடித்து நிற்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதோடு, இது அனுமதியுடன் எடுக்கப்பட்ட போட்டோதான் என்றும் கூறியுள்ளார்.