அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரஜினிகாந்த் காலா படத்திற்கு பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொள்ள படப்பிடிப்பு குழுவினருடன் சென்ற ரஜினிகாந்த், தனது போர்ஷன் படப்பிடிப்புகளை முடித்து விட்டு நேற்று இரவு 11 மணிக்கு சென்னை திரும்பினார்.
கோல்கட்டாவிலிருந்து சென்னை வந்த அவருக்கு விமான நிலையலத்தில் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். பத்திரிகையாளர்களும் காத்திருந்தனர். ரசிகர்களின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்ட ரஜினி, பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் வேகமாக நடந்து சென்று காரில் ஏறிப் பறந்தார். சென்னை வருகைக்கு பிறகான அவரது அரசியல் நகர்வுகள் பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
முதல்கட்டமாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். மன்றத்திற்கு ஒரு கோடி பேர் சேர்ந்து விட்டதை கொண்டாடும் வகையில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தவும் ரஜினி தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் ரஜினியின் அடுத்த நகர்வுகள் பரபரப்பாகவே இருக்கும் என்று தெரிகிறது.