600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ் திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டாக்டர் சீனிவாசன். தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் வைத்து கொண்டவர். இவர் மீது பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அடிக்கடி ஜெயிலுக்கும் சென்று வருவார். இந்த நிலையில் அவர் மீது புதிய மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் தயாநிதி. இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்துள்ளது. இதற்காக அவர், சீனிவாசனை அணுகி உள்ளார். அப்போது அவரிடம் "சினிமா ரொம்ப கஷ்டம் நான் உனக்கு எனக்கு தெரிந்த பைனான்சியரிடம் குறைந்த வட்டிக்கு 30 லட்சம் கடன் வாங்கித் தருகிறேன். அதை வைத்து வேறு தொழில் செய்" என்று கூறியிருக்கிறார். அதன்படி 30 லட்சம் கடனுக்கு தயாநிதியிடம் 4லட்சத்து 16 ஆயிரம் கமிஷன் வாங்கி உள்ளார்.
ஆனால் கடன் பெற்றுத்தராமல் ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக தயாநிதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.