சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் தான் அரசியலுக்கு வரப்போவதை அறிவித்தார் ரஜினிகாந்த். அதையடுத்து அரசியல் கட்சி தொடங்க வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதம் முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வந்த நிலையில், தற்போது ஒரு கோடி மைல் கல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் உற்சாகமடைந்துள்ள ரஜினி, ஒரு கோடியை உறுப்பினர்களை முதலில் டார்க்கெட்டாக வைத்திருந்தவர் இப்போது அதை இரண்டு கோடியாக உயர்த்தி, மேலும் உறுப்பினர் சேர்க்கையை தொடருமாறு மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார்.