தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் இருந்து புதுப்புது கதாநாயகிகளாக உருவாக்கி தமிழுக்கு அனுப்பிவைத்து விட்டு, தமிழில் நன்றாக நடிக்கும் கதாநாயகர்களை மலையாள படங்களில் நடிக்க வைப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த வருடம் நடிகர் விஷால் கூட வில்லன் என்கிற மலையாள படத்தில் நடித்தது அப்படித்தான். அதை தொடர்ந்து நடிகர் ஜெய்யும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதிலும் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் ராஜா-2 என்கிற படத்தில் மம்முட்டிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறார் ஜெய்.
இந்தப்படத்தின் முதல் பாகமான போக்கிரி ராஜாவில், மம்முட்டியின் தம்பியாக நடித்தவர் பிருத்விராஜ். ஆனால் இரண்டாம் பாகத்தில் பிருத்விராஜ் நடிப்பது சந்தேகம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜெய் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலிமுருகன் வெற்றிப்படத்தை இயக்கிய வைஷாக்கும், அந்த படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவும், மீண்டும் இந்த ராஜா-2 வில் இணைகிறார்கள் என்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.