அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
டிராபிக் ராமசாமி படத்தில் நடித்தவர் உபாசனா. உபாசனாவுக்கு ஆக்சன் ஹீரோயின் ஆகும் ஆசை இருக்கிறதாம். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அப்பா, அம்மா பிறந்தது வங்காளம், நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில். அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர். அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது என்னுடன் இருக்கிறார். நானும் சாப்ட்வேர் இஞ்சினீயர் தான். 2015-ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன்.
ஏற்கெனவே கன்னடப் படத்தில் அறிமுகமாகிவிட்டேன். தமிழில் அ 88 என்கிற படத்தின் மூலம் அறிமுகம் ஆனேன். சுமார் 80 விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு. அதனால் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான "வில்லா டூ வில்லேஜ்" நிகழ்ச்சியில் எனக்கு ரியல் பைட்டர் என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது. அதனால் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்சன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் "கருத்துக்களை பதிவு செய்" எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன் என்றார் உபாசனா.