பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வாரம் பாலிவுட்டில் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக உருவாகி இருக்கும் சஞ்சு என்கிற படம் வெளியானது. பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்தப்படத்தை இயக்கியுள்ள இந்தப்படத்தில் சஞ்சய் தத் ஆக பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். தற்போது வரை சுமார் 250 கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவர் வெறும் சினிமா பிரபலம் என்பது மட்டுமே காரணம் அல்ல 1993 இல் மும்பையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதும் அதன்பின் அவர் சிறைவாசம் அனுபவித்தும் சேர்த்துதான் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தூண்டியது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
25 வருடங்களுக்கு முன் சஞ்சய் தத்திற்கும் இந்த மும்பை வெடிகுண்டு நிகழ்விற்கும் தொடர்ப்பு இருப்பதாக வெளிப்படுத்தியவர் க்ரைம் நியூஸ் ரிப்போர்ட்டர்ரான பல்ஜித் பார்மர் என்பவர் தான் அதன் பின்னரே இந்த விஷயம் மிக தீவிரமாகி அப்போது வெளிநாடு சென்று திரும்பிய சஞ்சய் தத் உடனடியாக கைது செய்யப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது தற்போது சஞ்சய் தத்தின் வழக்கை வரலாறு படமாகியுள்ள நிலையில் பார்மரை பலரும் தொடர்பு கொண்டு சஞ்சு படத்தை பார்த்து விட்டீர்களா என பலரும் விடாமல் கேட்டு வருகின்றனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள பார்மர், "நான் ஒரு சினிமா விரும்பி அல்ல அடிக்கடி படம் பார்ப்பவனும் அல்ல அப்படியே சஞ்சு படத்திற்கு போனாலும் ராஜ்குமார் ஹிரானி தான் விரும்பியபடி கதையை வடிவமைத்திருக்க போகிறார் உண்மைகள் அப்படியே மறைக்கப்பட்டு தான் இருக்கும்" என விரக்தியுடன் கூறியுள்ளார் பார்மர்