ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மலையாள திரையுலகத்தை விட்டு ஒதுங்கி இருந்த துல்கர் சல்மான் தற்போது மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பி படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தற்போது அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ஒரு யமண்டன் பிரணயகதா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை நௌபல் என்கிற புது இயக்குனர் இயக்குகிறார் இவர் ஏற்கனவே நிறைய டிவி நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவம் உள்ளவர்.
இந்த படத்தில் துல்கர் ஹீரோவாக இருந்தாலும் இந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க வைத்திருப்பது இந்த படத்தின் கதாசிரியர்களான பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகிய இருவரும் தான். ஏற்கனவே அமர் அக்பர் அந்தோணி மற்றும் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய இந்த இரட்டையர் கூட்டணி இந்த படத்தின் மூலமாக மூன்றாவது முறையாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் நகைச்சுவையில் துல்கரின் இன்னொரு முகத்தை பார்க்கலாம் என்கிறார்கள் இந்த கதாசிரியர்கள் போதாதற்கு கதாசிரியர்களில் ஒருவரான விஷ்ணு உன்னிகிருஷ்ணனும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறாராம்.