'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குலேபகாவலி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 ஆகிய படங்களில் நடிக்கிறார் ஹன்சிகா. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், புதிய படங்களில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள ஹன்சிகா, தான் எதிர்பார்ப்பது போன்ற கதைகள் வரவில்லை என்கிறார்.
அதுகுறித்து அவர் வறுகையில், கடந்த சில மாதங்களில் நான் 30 கதைகள் கேட்டேன். ஆனால் எல்லா கதைகளுமே பப்ளியான வேடங்களாக வந்தன. அதுபோன்று நிறைய படங்களில் நடித்து விட்டேன். இனிமேல் பர்பாமென்ஸ் ரோல்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் ஹன்சிகா.
மேலும், தற்போது நான் மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியிருக்கிறேன். அந்த வீட்டின் உள்புற அலங்கார வேலைகள் மற்றும் நான் பராமரித்து வரும் குழந்தைகளுடனும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்கிறார் ஹன்சிகா.