தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரே படத்தில் சூர்யா, ஆர்யா என்பது ரைமிங்காக இருக்கும். செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து அவருடைய அபிமான இயக்குனரான கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது.
சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதம் லண்டனில் உள்ள லைகா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சூர்யா, சாயிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும் இணைகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சூர்யா உடன் ஆர்யா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.
ஆர்யா இதற்கு முன் மாதவன் உடன் 'வேட்டை' படத்திலும், அஜித் உடன் 'ஆரம்பம்' படத்திலும், விஷால் உடன் 'அவன் இவன்' படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் 'புறம்போக்கு என்கிற பொது உடமை' படத்திலும், பாபிசிம்ஹா, ராணா டகுபட்டி ஆகியோருடன் 'பெங்களூர் நாட்கள்' ஆகிய படத்திலும் நடித்திருக்கிறார்.
ஆனால், விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது சூர்யா படத்தில் ஆர்யா தான் வில்லன் என்ற பேச்சு எழுந்துள்ளது. விஷால் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த ஆர்யா, சூர்யா படத்தில் மட்டும் எப்படி நடிக்க சம்மதித்துள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.