ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேவி.ஆனந்த், சூர்யா இணையும் மூன்றாவது படம் என்பதாலோ என்னவோ சூர்யாவின் 37-வது படத்தை பற்றி தினசரி ஒரு ஆச்சர்யமான செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாளத்தில் இருந்து நடிகர் மோகன்லால், தெலுங்கில் இருந்து அல்லு சிரிஷ், பாலிவுட்டிலிருந்து போமன் இரானி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பது உறுதியாகி உள்ளது. கதாநாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு படத்தின் பூஜையுடன் லண்டனில் துவக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி கசிந்துள்ளது. இன்னும் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போது ஆர்யாவும் லண்டனில் முகாமிட்டுள்ளார் என்பது இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.