இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த இரும்புதிரை படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலையும் குவித்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இரும்புத்திரை இரண்டாம் பாகம் தயாராகப்போவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தனது அடுத்து கூட்டணியை கார்த்தியுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
டிஜிட்டல் உலகில் நடக்கும் பகீர் பின்னணியை கொண்டு அவர் சொன்ன கதை கார்த்திக்கிற்கு பிடித்துவிடவே ஓகே சொல்லிவிட்டாராம். இது இரும்புத்திரை இரண்டாம் பாக கதை அல்ல வேறு பாணியில் பயணிக்கும் கதை என்கிறார்கள்.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவராக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முன்னணி நாயகி நடிக்கிறார். இது தொடர்பாக சாயிஷா மற்றும் கீர்த்தி சுரேசிடம் பேச்சு நடந்து வருகிறது. சாயிஷா ஏற்கெனவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடித்து விட்டதால் கீர்த்திக்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் என்று தெரிகிறது.