தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இப்போதெல்லாம் பயோகிராபிக் படங்கள் தான் டிரண்டிங். சாவித்ரி வாழ்க்கை கதை மகாநதி (நடிகையர் திலகம்), சஞ்சய் தத் வாழ்க்கை கதை சஞ்சு, போன்றவை சமீபத்தில் வெற்றி பெற்ற படங்கள். தமிழில் எம்.ஜி.ஆரின் கதை படமாகி வருகிறது. தெலுங்கில் என்.டி.ராமராவின் கதையும், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கதையும் படமாகி வருகிறது. இதில் என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடிக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்தவரும். தற்போதைய தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ் வாழ்க்கையும் சினிமாவாக தயாராக இருக்கிறது. படத்திற்கு உதயசிம்ஹம் என்று டைட்டில் வைத்துள்ளனர். போராடும் சிங்கம் என்று இதன் பொருள். இந்தப் படத்தை அல்லு கிருஷ்ணராஜு இயக்குகிறார்.
இதில் சந்திரசேகரராவாக நடிப்து நம்ம நாசர். "அவரது கேரக்டரில் நடிக்க பலர் பரிசோதிக்கப்பட்டனர். அவரின் தோற்றத்தை சிலர் ஒத்திருந்தால் நடிப்பு வரவில்லை. நடிக்க வந்தால் தோற்றம் ஒத்துப்போகவில்லை. ஆனால் நடிகர் நாசர் அதற்கு கச்சிதமாக பொருந்தினார். அதனால் அவரையே நடிக்க வைத்து விட்டோம்" என்கிறார் தயாரிப்பாளர் நாகேஸ்வரராவ்
"சந்திரசேகரராவின் இளம் வயது வாழ்க்கை, அவரது தனிமனித போராட்டங்கள், தெலுங்கான போராட்டங்கள், சொந்த வாழ்க்கை அனைத்தும் படத்தில் இடம்பெறுகிறது. படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் அல்லு கிருஷ்ண ராஜு.
"நான் இதுவரை 500 படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இதுதான் எனக்கு முக்கியமான படம். தெலுங்கானா மக்களின் மதிப்பு மிக்கவர் கேரக்டரில் நடிப்பதால் அதற்குரிய எச்சரிக்கை உணர்வுடன், கவனத்துடன் நடிக்கிறேன். அவரது வீடியோக்கள், அவரைப்பற்றிய புத்தகங்களை படித்து என்னை தயார் செய்து கொண்டேன்" என்கிறார் நாசர்.