Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் கில்டில் மீண்டும் மோதல்: தலைவர் மீது போலீசில் புகார்

03 ஜூலை, 2018 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Again-issue-in-Guild-:-Complaint-against-Jaguar-Thangam

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. சுமார் 1500 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு படம் தயாரிப்பதென்றால் அதன் தலைப்பை பதிவு செய்ய வேண்டும். தலைப்பை பதிவு செய்ய கில்டில் குறைந்த கட்டணம் என்பதால் இந்த சங்கத்தில் பதிவு செய்வார்கள். இதில் பல ஊழல் புகார்கள் உள்ளன.

இதன் தலைவராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் பதவிக்கு வந்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் மற்ற நிர்வாகிகளால் சொல்லப்பட்டது. தேர்தல் நடக்காமல் இருந்தது. பின்னர் வழக்கு தொடரப்பட்டு கடந்த மாதம் தேர்தல் நடந்தது.


தலைவராக ஜாக்குவார் தங்கம் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் மற்ற பதவிகளுக்கு அவரது எதிர் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். இதனால் மீண்டும் சங்க நிர்வாகிகள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஜாக்குவார் தங்கம் தங்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாக துணை தலைவர் ரத்தினம் நேற்று போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:


கடந்த மாதம் 10ந் தேதி நடந்த தேர்தலில் ஜாக்குவார் தங்கம் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த செயற்குழுவில் உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பதிவேட்டை அவரே வைத்துக் கொண்டார். சங்கத்தில் இதற்கு முன் நடந்த ஊழல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக மற்றவர்களை மிரட்டும் தொணியில் நடந்து வருகிறார். சங்கத்திற்கு தொடர்பில்லாத 20 நபர்களை சங்கத்திற்கு அழைத்து வந்து நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுத்து மிரட்டுகிறார். இதனால் ஊழியர்களும், நிர்வாகிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஜாக்குவார் தங்கத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in