'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சஞ்சு' படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான மூன்றே நாளில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'பாகுபலி 2' படம்தான் இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்திருந்தது. அந்தப் படம் முதல் நாளில் 46.5 கோடி வசூலைப் பெற்றது. அந்த சாதனையை 46.71 கோடி வசூலித்து 'சஞ்சு' படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சய் தத் எந்த தவறும் செய்யாதவர், சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவரை சிறைக்குச் செல்ல வைத்தது என்ற ரீதியில் எடுக்கப்பட்டுள்ள 'சஞ்சு' படம் விமர்சன ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை எழ வைத்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் படத்தின் வசூல் சாதனை புரியும் அளவிற்கு அமைந்திருப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
'பாகுபலி 2' போன்ற பிரம்மாண்டமான படத்தின் வசூலை, குற்றம் செய்து தண்டனை அனுபவித்த ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் மிஞ்சியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.