இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஏ.எம்.ஆர்.எம் பிலிம்ஸ் சார்பில் சுப்பாராஜ் தயாரித்து, இயக்கும் படம் அரளி. இதில், சுப்பாராஜின் தந்தை அருணாசலம் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் சுப்பாராஜும் நடித்துள்ளார். இவர்கள் தவிர மதுசூதன், மஞ்சுளா ரதோட், காளிதாஸ் அமிர்தலிங்கம் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.எஸ்.ஜான், அணில்குமார் இசை அமைத்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சுப்பராஜ் கூறியதாவது: எனது தந்தைக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அதற்கேற்ப கதை எழுதி, இதில் அவரை நடிக்க வைத்துள்ளேன்.
"பெற்றோர்களை பிள்ளைகள் போற்ற வேண்டும்" என்பது தான் படம் சொல்லும் செய்தி. இந்த கருத்தை வலியுறுத்தி நான் தமிழ்நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன். இந்த பயணம் முடிந்ததும் படம் வெளியிடப்படும் என்றார்.
சுப்பாராஜின் சைக்கிள் பயணத்தை நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.