ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி - நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் டிக் டிக் டிக். டி.இமான் இசையமைத்த இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் அறிமுகமானார். ஜெயம் ரவியின் மகனாகவே அவர் நடித்திருந்தார்.
டிக் டிக் டிக் படத்தின் சக்சஸ் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதோடு, இன்று ஆரவ் ரவியின் பிறந்த நாள் என்பதால் அதையும் இந்த விழாவில் மீடியாக்கள் முன்பு கொண்டாடினர்.
ஜெயம்ரவி பேசுகையில், டிக் டிக் டிக் படத்தின் கதை முதலில் பலருக்கு பிடிக்கவில்லை. வித்தியாசமான கதை என்பதால் துணிந்து நடித்தேன். இன்றைக்கு ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த படத்தில் முதலில் படமாக்கியபோது செட் போடவில்லை. அதில் தான் நானும், நிவேதா பெத்துராஜூம் நடித்தோம். அதையடுத்து செட்டில் படமாக்கியபோது அந்த செட்டைப்பார்த்து அசந்து விட்டோம். அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது.
இந்த செட்டைப்பார்த்த பிறகு தான் இந்த படம் ஓடுங்கிற நம்பிக்கையே எனக்கு வந்திருக்கு என்றார் நிவேதா பெத்துராஜ். அந்த அளவுக்கு அந்த செட் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.
மிருதன் படத்தில் நடித்தபோது முதுகில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்தேன். அதையடுத்து இந்த படத்திற்காக ரோப்பில் தொங்கியபடியே நடிக்க வேண்டியிருந்ததால் வலி இருந்தது. என்றாலும், அதை பொறுத்துக்கொண்டு நடித்தேன். இன்றைக்கு ஆடியன்ஸ் ஹிட் படமாக்கி விட்டதால் அந்த வலி காணாமல் போய் விட்டது.
இந்த படத்தில் நடித்தவர்களை விடவும் டெக்னீசியன்கள் ஒவ்வொருவருமே சிறப்பாக செயல்பட்டனர். காரணம் இந்த டிக் டிக் டிக் படத்தின் கதை டெக்னிஷியன்களுக்கான கதை. அவர்கள் ஒருவர் தவறு செய்திருந்தாலும் படம் தோல்வியடைந்திருக்கும். ஆனால் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு படத்தை வெற்றிப்படமாக்கி விட்டனர்.
அதேபோல் இசையமைப்பாளர் டி.இமானுக்கு இது 100வது படம். அதனால் அவரது மெனக்கெடலும் இந்த படத்தில் அதிகமாக இருந்தது. பாடல், பின்னணி இசை என்று தனது தனித்திறமையை வெளிப்படுத்தி படத்திற்கு பெரிய பலமாக இருந்தார்.
இவ்வாறு ஜெயம்ரவி பேசினார்.