‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
தரமணி படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. தியேட்டர்களில் இன்னும் வெளியாகாத இந்தப் படம் உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, வடிவுக்கரசி. லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் அஞ்சலி தான் ஹீரோயின், அவர் மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் என்றே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது தரமணி படத்தில் அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடித்து போன்று இதிலும் சிறப்புத் தோற்றத்திலேயே நடித்துள்ளார். படத்தின் ஹீரோயின் அஞ்சலி அமீர் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் இந்த அஞ்சலி அமீர்.
கேரளாவில் பிரபலமான திருநங்கை இவர். டி.வி.ஷோக்களில், படங்களில் நடித்து பிரபலமாகியிருக்கிறார். ஒரு ஷோவில் இவரை பார்த்து விட்டு பேரன்பு படத்தில் நடிக்க சிபாரிசு செய்ததே மம்முட்டி தான் என்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி அமீர், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 8 மாத குழந்தையாக இருந்தபோது தாய் இறந்துவிட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். ஷாம்சீர் என்ற பெயரில் ஆணாக இருந்தவர். அதன் பிறகு சென்னை வந்து அஞ்சலி என்ற பெண்ணாக மாறினார். பட்டப்படிப்பு, சமூக சேவை என பிசியான அஞ்சலி இப்போது நடிகை ஆகிவிட்டார். அதுவும் தமிழ் படத்தில்.