விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
மஹாராஷ்டிரா மாநிலத்தில், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சினிமா பிரபலங்கள் உதவ வேண்டும் என, மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள், தாய்லாந்தில் நடந்த, ஐ.ஐ.எப்.ஏ., எனப்படும், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவுக்கு சென்று விட்டனர். ஆனால், நடிகை கஜோல் மட்டும், தன் கணவரும், நடிகருமான, அஜய் தேவ்கனுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களில் பங்கேற்றார்.
'சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, கஜோல் பேசினார். அவரது பிரசாரத்துக்கு, நல்ல தாக்கம் இருந்ததால், அதிகாரிகள், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.