பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் அறிமுகமானாலும் கவுதம் மேனனின், அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். தமிழில் பெரிய இடத்துக்கு வருவார் என்று பார்த்தால் கைவசம் இரண்டு படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார். கடந்த வருடம் இவர் நடித்த சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய இரண்டு படங்களும் இவருக்கு பெயர் சொல்லும்படி அமையவில்லை.
அதிலும் சத்ரியன் படத்தை தான் ரொம்பவே எதிர்பார்த்ததாக சொல்லும் மஞ்சிமா மோகன், படத்தை முதல் காட்சி தியேட்டரில் பார்த்ததும் அதிர்ந்துவிட்டாராம். படம் ரிலீஸாவதற்கு முன்பு இருந்த வரவேற்பு அப்படியே மாறிப்போனதை கண்டு அதிர்ந்துபோன அவர், வீட்டிற்கு வந்து கதவை சாத்திக்கொண்டு குமுறி குமுறி அழுதாராம். அதன்பின் த்ரிஷாவுடன் போனில் பேசியபோது, அவர்தான், கவலைப்படாதே இதெல்லாம் கடந்துபோகும் என கூறி மஞ்சிமாவை ஆறுதல் படுத்தினாராம்.