இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கபாலி, காலா என ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிவிட்ட ரஜினி, தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இதையடுத்து ரஜினிக்கு ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன் ஆகியோர் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. சில இளம் இயக்குநர்களும் ரஜினியிடம் கதை சொல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை இயக்கிய சாய்ரமணியும், டார்ஜிலிங் படப்பிடிப்புக்கு ரஜினி செல்வதற்கு முன்பு அவரை சந்தித்து, பாட்ஷா பாணியில் ஒரு அதிரடியான ஆக்சன் கதையை சொன்னாராம்.
அந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னாராம் ரஜினி. அதேசமயம், இனிமேல் இந்த மாதிரியான கதைகளில் நான் நடிப்பது சரியாக இருக்காது என்று சொல்லி நிராகரித்து விட்டாராம்.