டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ஞான் மேரிக்குட்டி என்கிற படம் வெளியானது. ரஞ்சித் சங்கர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் திருநங்கை ஒருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. திருநங்கைகளை மரியாதையாக புதிய கோணத்தில் காட்டியிருந்தனர். படம் வெளியான பின் பத்திரிக்கை விமர்சனம் முதற்கொண்டு, அனைவரிடமும் இருந்து படத்தில் நடித்த ஜெயசூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நடிகை அமலாபால் படத்தை பார்த்துவிட்டு ஜெயசூர்யாவையும், இயக்குனர் ரஞ்சித் சங்கரையும் மனதார பாராட்டியுள்ளார். இந்த படம் குறித்து அவர் கூறும்போது, திருநங்கைகளை இப்படியும் நல்ல முறையில் காட்ட முடியுமா என இதுவரை ஒரு சந்தேகம் இருந்தது. அதை இந்த படம் நிவர்த்தி செய்துள்ளது. இதுவரை யாரும் பயணிக்காத சாலையில் பயணம் செய்யும் துணிச்சலை எடுத்ததற்காக ஜெயசூர்யாவுக்கும், படத்தின் இயக்குனர் ரஞ்சித் சங்கருக்கும் பாராட்டுகளை மனதார தெரிவித்து கொள்கிறேன் என அமலாபால் கூறியுள்ளார்.